கலாநிதி அஹ்மத் அப்துல் கரீம்

ஒரு முஃமின் ரமளானுக்குப் பிந்தியும் இரவு தொழுகையை தொடருதல், குர்ஆன் ஓதுதல், ஷவ்வால் மாதத்தில் ஆறு நாட்கள் நோன்பு நோற்றல் போன்ற நல்ல செயல்களைச் செய்வது இறை திருப்தியைப் பெற்றுக் கொடுக்கும்.

ஆனால், இது மட்டும் போதாது. இந்த வழிபாடுகளை முழுமைப்படுத்தும் ஒரு முக்கியமான விடயம் உள்ளது, அது தான் ஹலாலை ஹலாலாக்குவதும் ஹராத்தை ஹராமாக்குவதுமாகும்.

(உறவுகளைத் துண்டித்தல், பகைமை, அகந்தை, அருவருப்பான தீவினைகள், பொய் சாட்சி, புறம் பேசுதல் போன்ற) தடைசெய்யப்பட்டவற்றிலிருந்து விலகுவதற்கான கவனம், கட்டளையிடப்பட்ட அம்சங்களை கடைப்பிடிப்பதை விட முக்கியமானதாகும்.
ஆனால், இது கட்டளைகள் விடயமாக நாம் அசியத்தையாக இருக்க வேண்டும் என்பது பொருளல்ல;
தடைசெய்யப்பட்டவற்றைத் தவிர்ப்பதிலும் நாம் தீவிரமாக இருக்க வேண்டும்.

புகாரி முஸ்லிம் ஆகிய இருவரும் அபூஹுரைரா (ரலி) வழியாக அறிவிக்கின்றனர்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்: “நான் உங்களுக்கு தடை விதித்தவற்றைத் தவிருங்கள், மேலும் நான் உங்களுக்கு கட்டளையிட்டவற்றை உங்களால் முடிந்த வரை கடைப்பிடியுங்கள்.”

முஸ்லிம் மற்றும் அஹ்மத் ஆகியோரது பதிவில் ஜாபிர் (ரலி) கூறுகின்றார்: ஒரு நபர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்: *”நான் கட்டாயமான தொழுகைகளை தொழுது, ரமளானில் நோன்பு நோற்று, ஹலாலை ஹலாலாக்கி, ஹராத்தை ஹராமாக்கி, அதற்கு மேல் எதையும் செய்யாவிட்டால் நான் சொர்கத்தில் செல்லுவேனா?” நபி (ஸல்) பதிலளித்தார்கள்: “ஆம்” .அந்த நபர் கூறினார்: “அல்லாஹ்வின் சத்தியமாக, நான் இதற்கு மேல் எதையும் செய்ய மாட்டேன்.”

அல்லாஹு தஆலா ஸூரத்துல் பகராவில் நோன்பு தொடர்பான வசனங்களை முடித்த பின் பின்வருமாறு கூறுகிறான்:
“அவ்வாறு அல்லாஹ் தன் வசனங்களை மக்களுக்கு அவர்கள் தக்வா உள்ளவர்களாக மாற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் விளக்குகின்றான்.
உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்; மேலும் நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து எந்த ஒரு பகுதியையும் அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் இலஞ்சம் கொடுக்க நெருங்காதீர்கள்.(அல்-பகரா: 2:187-188)

இப்னு ஆஷூர் இதற்கு விளக்கம் கூறுகையில்: “இது அனுமதிக்கப்படாத முறையில் நோன்பை முறிப்பதற்கான துணிச்சலைத் தவிர்ப்பதைப் பற்றிய எச்சரிக்கையாகும். ஏனெனில், அது ஹராமான உணவு அருந்துவதைப் போன்றதாகும். அதனால், முறையற்ற விதத்தில் செல்வங்களை நுகர்வதையும் அதனுடன் இணைத்துக் கூறியுள்ளான்.” என்று கூறுகிறார்.

ஆகவே, நாம் கட்டளைகளைக் கடைப்பிடித்து, தடைசெய்யப்பட்டவற்றைத் தவிர்ப்பதை உறுதியாக மேற்கொள்வோம், அப்போது நாம் அல்லாஹ்வின் திருப்தியை பெற்ற தக்வா உள்ளவர்களாக இருப்போம்.
தமிழில்: அஷ்ஷைக் பளீல் (நளீமீ)
استمرار الطاعات واجتناب المحرمات بعد رمضان

استمرار المؤمن على قيام الليل وتلاوة القرآن وصيام ست من شوال وغيرها من الطاعات شيء مرضي.

لكنه ليس كل شيء، فهناك المتمم لهذه الطاعات، ولعله الأهم، وهو إحلال الحلال، وتحريم الحرام.

الاهتمام بأمر المنهيات ( قطيعة الرحم – الشحناء – الكبر- مقارفة الفواحش المنكرات – شهادة الزور – الغيبة ..) ربما أبلغ من الاهتمام بالمأمورات، ولا يعني ذلك التساهل بالمأمورات، وإنما التشديد في اجتناب المنهيات
.

روى الشيخان عن أبي هريرة رضي الله عنه قال رسولُ الله صلى الله عليه وسلم : ( ما نهيتُكم فاجتَنِبُوه، وما أمرتكم فائتوا منه ما استطعتم ).

روى مسلم و أحمد عَنْ جَابِرٍ أَنَّ رَجُلًا سَأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ : ( أَرَأَيْتَ إِذَا صَلَّيْتُ الصَّلَوَاتِ الْمَكْتُوبَاتِ، وَصُمْتُ رَمَضَانَ، وَأَحْلَلْتُ الْحَلَالَ، وَحَرَّمْتُ الْحَرَامَ، وَلَمْ أَزِدْ عَلَى ذَلِكَ شَيْئًا أَأَدْخُلُ الْجَنَّةَ؟ قَالَ: نَعَمْ . قَالَ: وَاللَّهِ لَا أَزِيدُ عَلَى ذَلِكَ شَيْئًا).

بعد أن أنهى الله تعالى آيات الصيام في سورة البقرة قال : كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَّقُونَ * وَلَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ وَتُدْلُوا بِهَا إِلَى الْحُكَّامِ لِتَأْكُلُوا فَرِيقًا مِنْ أَمْوَالِ النَّاسِ بِالْإِثْمِ وَأَنْتُمْ تَعْلَمُونَ).

قال ابن عاشور: ( تَحْذِيرٌ مِنَ الْجُرْأَةِ على مُخَالفَة حكم الصِّيَامِ بِالْإِفْطَارِ غَيْرِ الْمَأْذُونِ فِيهِ ، وَهُوَ ضَرْبٌ مِنَ الْأَكْلِ الْحَرَامِ، فَعَطَفَ عَلَيْهِ أَكْلٌ آخَرُ مُحَرَّمٌ، وَهُوَ أَكْلُ الْمَالِ بِالْبَاطِلِ ).

فلنحرص على فعل المأمورات ، واجتناب المنهيات؛ حتى نكون من المتقين المرضيين.