உடலைச் சுத்­த­மாக வைத்­தி­ருப்­பதில் காட்டப்படும் அக்கறை உள்­ளத்தைச் சுத்­த­மாக வைத்­தி­ருப்பதில் காட்டப்படுவதில்லை

மு.கா. தொடர் விரிவுரையில் அஷ்ஷெய்க் பழீல்

தற்­கா­லத்தில் உடலை சுத்­த­மாக வைத்­தி­ருப்­ப­தற்கும் அதற்கு நோய்கள் அணு­கா­தி­ருக்­கவும் பல்­வே­று­பட்ட ஏற்­பா­டு­களை மனி­தர்கள் செய்து வரு­கின்­றார்கள். வைத்­தி­ய­சா­லைகள், போஷாக்­குள்ள உண­வுகள், தேகப்­பி­யா­சங்கள் போன்­றன உடலை சுத்­த­மா­கவும் பல­மா­கவும் வைத்­தி­ருப்­ப­தற்­கான முயற்­சி­க­ளாகும். இவை வர­வேற்­கத்­தக்­கவை. வேண்­டத்­தக்­கவை. ஆனால் இதே அளவு கவனம் மனி­தனின் மிகப் பிர­தா­ன­மான கூறா­கிய உள்­ளத்­துக்கு வழங்­கப்­ப­டு­வ­தில்லை. அது நோய்­வாய்ப்­பட்டு பல­வீ­ன­ம­டை­வ­தனால் மனித வாழ்வில் ஏற்­ப­டக்­கூ­டிய ஆபத்­துக்கள் அப­ரி­மி­த­மா­னவை. பெருமை, பொறாமை, வஞ்­சகம் போன்ற நோய்­க­ளி­லி­ருந்து உள்­ளத்தைப் பாது­காப்­ப­தற்­கான ஏற்­பா­டு­களில் மனி­தர்கள் கவனம் செலுத்­து­வது மிகக் குறை­வாகும் என ஜாமிஆ நளீ­மிய்­யாவின் சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பழீல் (நளீமி) தெரி­வித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­மை­ய­கத்தில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த விஷேட விரி­வு­ரை­த் தொடரில் ‘உள நோய்­களும் உளப் பரி­சுத்­தமும்’ எனும் தலைப்பில் கடந்­த ­வாரம் இடம்­பெற்ற விரி­வு­ரையின் போதே அவர் இக் கருத்­துக்­களைத் தெரி­வித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தலை­மையில் இடம்­பெற்ற மேற்­படி நிகழ்வில் கட்­சியின் உயர்­மட்ட உறுப்­பி­னர்கள் உட்­பட மேலும் பல பிர­மு­கர்­களும் கலந்­து­கொண்­டனர்.

அஷ்ஷெய்க் பழீல் தொடர்ந்தும் இங்கு உரை நிகழ்த்துகையில்,

மனிதன் செய்யும் பாவங்­களை உட­லோடு சம்­பந்­தப்­பட்­டவை உள்­ளத்­தோடு சம்­பந்­தப்­பட்­டவை என இரண்­டாகப் பிரிக்­கலாம். களவு, கொலை, விபச்­சாரம், பொய், புறம் போன்­றன உடல் உறுப்­புக்­களால் வெளி­யாகும் பாவங்­க­ளாகும். ஆனால் இவற்­றை­விட உள்­ளத்­தோடு சம்­பந்­தப்­பட்ட குப்ர், ஷிர்க், நய­வஞ்­சகம், பெருமை, பொறாமை, கஞ்­சத்­தனம், உலக மோகம், பேராசை, வைராக்­கியம் போன்ற பாவங்கள் உடல் உறுப்­புக்­களால் வெளி­யாகும் பாவங்­க­ளுக்கு அடிப்­ப­டை­யாக அமை­வ­துடன் அவற்றை விடவும் பார­தூ­ர­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்தக் கூடி­ய­வை­யா­கவும் காணப்­ப­டு­கின்­றன. எனவே உடலால் வெளி­யாகும் பாவங்­களை ஒழிக்க முன்னர் உள்­ளத்தில் குடி­கொண்­டி­ருக்கும் பாவங்­களை இல்­லா­தொ­ழிக்க அல்­லது அதி­க­பட்சம் கட்­டுப்­ப­டுத்த முன்­னு­ரிமை வழங்­கப்­பட வேண்டும்.

அல்­லாஹ்வின் பார்வை படும் இட­மாக உள்ளம் இருப்­ப­தனை நபி­ய­வர்கள் பின்­வ­ரு­மாறு குறிப்­பிட்­டார்கள். “நிச்­ச­ய­மாக அல்லாஹ் உங்­க­ளு­டைய உடல்­க­ளையோ, தோற்­றங்­க­ளையோ பார்ப்­ப­தில்லை. என்­றாலும் அவன் உங்­க­ளது உள்­ளங்­க­ளையும் செயல்­க­ளை­யுமே பார்க்­கிறான்”

ஒரு மனி­த­னது வெற்றி உள்­ளத்தின் பரி­சுத்­தத்­தி­லேயே தங்­கி­யி­ருப்­ப­தாக அல்லாஹ் கூறு­கிறான்.

” யார் (உள்­ளத்தை) அதனை பரி­சுத்­தப்­ப­டுத்திக் கொண்­டாரோ அவர் திட்­ட­மாக வெற்­றி­ய­டைந்து விட்டார். யார் (பாவங்­க­ளுக்குள்) அமிழ்த்திக் கொண்­டாரோ அவர் தோல்­வி­ய­டைந்­து­விட்டார்.

மனிதன் படைக்­கப்­பட்­ட­தற்கும் பிறகு இடம்­பெற்ற முதல் பாவமே தலைக்­கனம் அல்­லது அகம்­பா­வ­மாகும். இந்­த நோய் இப்­லீஸைப் பீடித்­த­தனால் அவன் அல்­லாஹ்­வுக்கு எதி­ராக வாதிட்டு ஸுஜூது செய்ய மறுத்­து­விட்டான்.

மனிதன் உல­கத்­துக்கு வந்­த­தற்குப் பின்னால் இடம்­பெற்ற முதல் பாவம் பொறா­மை­யாகும். ஆதம் (அலை) அவர்­க­ளு­டைய புதல்­வர்­களில் இரு­வரும் குர்பான் கொடுக்க அல்­லாஹ்வால் அவர்­களில் ஒரு­வ­ரது குர்பான் மட்­டுமே ஏற்­கப்­பட்டு மற்­ற­வ­ரது குர்பான் நிரா­க­ரிக்­கப்­ப­டவே அவர்களில் ஒருவர் மற்­ற­வரை பொற­ாமையின் கார­ண­மாக கொலை செய்தார். இந்தப் பொறாமை மிகவும் ஆபத்­தா­னது. நெருப்­பா­னது விறகை எரித்து விடு­வது போல பொறாமை நற்­கா­ரி­யங்­களை அழித்து ஒழித்­து­விடும் என நபி (ஸல்) அவர்கள் கூறி­னார்கள்.

மேற்­கு­லகம் அறி­வியல் துறையில் கொடி­கட்டிப் பறந்து உடலைப் பேணிப் பாது­காப்­ப­தற்­கான முயற்­சி­களில் தீவி­ர­மாக அக்­கறை காட்­டு­கி­றது. ஆனால் அங்­கி­ருக்கும் மக்­க­ளது ஆன்­மீகப் பகுதி படு­மோ­ச­மாக புறக்­க­ணிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

மனித உள்­ளங்கள் மாச­டைந்து ஈவி­ரக்கம், அன்பு, கருணை என்­பன இல்­லாமல் போய்­விட்­டன. அமெ­ரிக்­காவில் சுமா­ராக 5000 பல்­கலைக் கழ­கங்கள் இருக்­கின்­றன. ஆனால் இதே அமெ­ரிக்கா உலகில் பேரா­சை­யோடும் ஆதிக்க வெறி­யோடும் தான் மாத்­தி­ரமே உலகை அனு­ப­விக்க வேண்­டு­மென்ற கீழ்த்­த­ர­மான உணர்­வோடும் தாண்­ட­வ­மா­டு­கின்­றது.

ஹிரோ­ஷி­மா­விலும் நாக­ஸா­கி­யிலும் அமெ­ரிக்கா போட்ட குண்­டினால் 175000 க்கும் மேற்­பட்­ட­வர்கள் இறந்து போனார்கள். எண்ணெய் வளத்தை சுரண்ட வேண்­டு­மென்ற ஒரே நோக்­கத்­தோ­டுதான் ஈராக்கில் நுழைந்த அமெ­ரிக்கா 1 ½ மில்­லியன் பேருக்கும் அதி­க­மா­னோரை கொலை செய்­தி­ருக்­கின்­றது. வெளித்­தோற்­றத்­திலே அழ­காக ஆடை­ய­ணிந்­தி­ருந்­தாலும் உள்ளம் மாசு­பட்­டி­ருக்­கின்­றது என்­ப­த­னு­டைய விளைவே இது.

உள்­ளத்தில் கபடம்,வைராக்­கியம், வஞ்­சகம் என்­பன இருந்தால் சுவ­னத்தில் கூட நுழைய முடி­யாது.

ஒரு தடவை நபி­ய­வர்கள் ஒரு மனி­த­னைப்­பார்த்து சுவர்க்­க­வாதி என்று சொன்­னார்கள். அதற்­கான கார­ணத்தைக் கண்­ட­றிய அவ­ரது வீட்­டுக்குச் சென்ற ஒரு நபித் தோழர் அவ­ருடன் மூன்று நாட்கள் தங்­கி­விட்டு அவ­ரிடம் விஷே­ட­மான நற்­செ­யல்கள் எத­னையும் காணாத போது அவ­ரி­டமே சுவ­னத்­துக்கு அரு­க­தை­யா­ன­வ­ராக உங்களை மாற்­றிய அம்சம் எது என வினா­வினார். அதற்கு அவர் நான் எவ­ரைப்­பற்­றிய கபட எண்­ணத்­தையும் உள்­ளத்தில் வைத்­தி­ருப்­ப­தில்லை. எவ­ருக்­கா­வது அல்லாஹ் வழங்­கிய ஓர் அருட்­கொ­டைக்­காக வேண்டி அவரைப் பார்த்துப் பொறா­மைப்­ப­டு­வ­து­மில்லை என்று அவர் கூறினார்.

எனவே பிற­ரது முன்­னேற்­றத்தைக் கண்டு சந்­தோ­சப்­ப­டு­வது என்றால் எமது உள்ளம் ஆரோக்­கி­ய­மாக இருக்­கி­றது என்ற அடை­யா­ளங்­களில் ஒன்­றாக அது இருக்க முடியும். எமது உள்­ளத்தைப் பரி­சுத்­தப்­ப­டுத்த நாம் விரும்­பினால் தொழுகை, திக்ர், இஸ்­திஃபார் போன்ற ஆன்­மீகக் காரி­யங்­களில் நாம் அதிகம் ஈடு­பட வேண்டும்.

புற்று நோய் மற்றும் ஏனைய நோய்­களால் பாதிக்­கப்­பட்­டி­ருக்கும் நோயா­ளி­களை சென்று பார்­வை­யிட வேண்டும். மன­நலம் குன்­றிய நிலையில் சிகிச்சை பெற்று வருவோரைச் சென்று பார்க்க வேண்டும். அநாதை இல்லங்களுக்கு போக வேண்டும்.

இவை எமது உள்ளத்தை இளகச் செய்து உயர் ஸ்தானங்களை நோக்கி அதனை அடையச் செய்து அதனை பரிசுத்தப்படுத்தும் என்றும் அஷ்ஷெய்க் பழீல் மேலும் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி மாதமும் 1 ஆம், 3ஆம் வியாழக்கிழமைகளில் இது போன்ற விரிவுரைகளை அதன் தலைமையகமான கொழும்பில் அமைந்துள்ள தாருஸ் ஸலாமில் ஏற்பாடு செய்து நடாத்தி வருகிறது.

அஷ்ஷெய்க் பழீல் இதற்கு முன்னர் ‘பொறுப்புக்கள் அனைத்தும் அமானிதங்கள்’ என்ற தலைப்பில் மற்றுமொரு விரிவுரையை அங்கு நடாத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top