முஸ்லிம் பெண் தாதிகள்

முஸ்லிம் பெண் தாதிகள் இஸ்லாமிய உடையை அணிவதற்கான உரிமையை அரசு வழங்கியிருப்பது சந்தோஷமான செய்தியாகும்.

ஆனால் தாதியர் பயிற்சி கலாசாலைகளில் முஸ்லிம் மாணவியர்களுக்கு இஸ்லாமிய அடிப்படையில் ஆடை அணிவதற்கு சில நெருக்குவாரங்கள் இருந்து வந்ததை அவதானித்த தேசிய சூரா சபையின் உறுப்பு அமைப்புகளில் ஒன்றான அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியம் இது விடயமாக கவனம் எடுக்கும்படி ஷூரா சபையைக் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக சுகாதார அமைச்சுக்கு தேசிய ஷூரா சபை இரண்டு தடவை முஸ்லிம் தாதி மாணவியர் இஸ்லாமிய முறைப்படி ஆடை அணிவதற்கான அனுமதியை வழங்கும் படி ஏலவே கோரிக்கை விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

ஆனால் இந்த விவகாரம் முஸ்லிம் தாதி மாணவிகளது ஆடைப் பிரச்சினை என்ற வட்டத்தையும் தாண்டி முஸ்லிம் தாதியரது ஆடை விவகாரம் என்ற பேசு பொருளாக தற்போது ஏன் மாறி இருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

இது எப்படி போனாலும் முஸ்லிம் பெண் தாதியருக்கு அரசாங்கம் இஸ்லாமிய முறைப்படி ஆடை அணியலாம் என்று தற்போது அனுமதி அளித்திருப்பதாகவும் இந்த அனுமதியை தாம் எதிர்ப்பதாகவும் சிலர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பான சில அவதானங்கள்:

  1. முஸ்லிம் பெண் தாதியர் இஸ்லாமிய உடையை அணிவது புதியதோ அல்லது அறியப்படாததோ அல்ல. உண்மையில், 50-க்கும் அதிகமான முஸ்லிம் பெரும்பான்மையுள்ள நாடுகளில், முறையான இஸ்லாமிய உடையை தொழில்முறை ஆடையாக முஸ்லிம் தாதியர் அணிவது சாதாரணமான மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாக உள்ளது.
  2. நாம் அறிந்த வகையில் இலங்கையின் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில், பெண் தாதியர் நீண்ட காலமாக இஸ்லாமிய உடையை எந்த பிரச்சனையும் இல்லாமல் அணிந்து வருகிறார்கள். இந்த நடைமுறை பல தசாப்தங்களாக சுகாதார சேவைகளுடன் இணைந்து நடந்து வருகிறது.
  3. தாதியர் இஸ்லாமிய முறைப்படி ஆடை அணிவதன் காரணமாக வைத்தியசாலைகளில் நோயாளிகள், மருத்துவர்கள் அல்லது பிற பணியாளர்களுக்கு தொந்தரவு அல்லது சிரமம் ஏற்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அவர்கள் அணியும் உடை, அவர்களின் கடமைகளையோ அல்லது மருத்துவமனை சூழலையோ பாதித்ததாகத் தெரியவில்லை.
  4. அரச மற்றும் தனியார் துறைகளில் உள்ள முஸ்லிம் பெண் அலுவலர்களுக்கு இஸ்லாமிய முறையிலான உடைகளை அணிவதை அனுமதிக்கின்றபோது, அதே உரிமையை தாதியருக்கு எவரும் மறுப்பதற்கு எந்த நியாயமான காரணமும் இல்லை.
  5. இந்த முடிவிற்கு எதிராக இருப்பவர்களின் நோக்கம் குறித்து சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. அவர்களின் எதிர்ப்பு, இஸ்லாமொபோபியா அல்லது அரசியல் நோக்கமுள்ள செயற்கூறுகளால் தூண்டப்பட்டிருக்கக்கூடும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top